egsisi

No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07 | Tel : 0112693272 | Fax: 0112693271

egsita

ஊடகசெயலமர்வு திருகோணமலையில் (10.08.2019)

இலங்கை பத்திரிகை பேரவையினால் முன்னெடுக்கப்படும் செயலமர்வின் தொர்ச்சியாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் உள்ளடக்கி 10 ஓகஸ்ட் 2019 அன்று திருகோணமலை ஜேகேஎபி விடுதியில் பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது.


இந்த பயிற்சி பட்டறை நிகழ்வில் திருகோமலை மாவட்ட அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்துறையை சேர்ந்த பெருமளவிலான ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த நிகழ்வின் பிரதான தொனிப்பொருளாக முரண்பாட்டு அறிக்கையிடலும் மற்றும் ஊடகவியலாளர்களின் வகிபாகமும் அமைந்திருந்தது.

இந்த பயிற்சி பட்டறையை களனிப்பல்கலைக்கழக பொதுசன ஊடகத்துறையின் தலைவரும் மற்றும் சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு.அருண லொக்குலியன, சிரேஷ்ட விரிவரையாளர் விஜயானந்த ரூபசிங்க மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் செந்தில்வேலவர் ஆகியோர் வழிப்படுத்தியிருந்தனர். இந்த பயிற்சி பட்டறை கலந்துரையாடல் மற்றும் உரையாடல் மூலம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட உதவிப்பிரதேச செயலாளர், பேரவையின் தலைவர், பேரவை உறுப்பினர்கள், பேரவை ஆணையாளர் மற்றும் பதில் ஆணையாளர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

மேலும் திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் மொழியியல் துறையின் தலைவர் கலாநிதி நவீன் ராஜ் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் பயிற்சி பட்டறையில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10

மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான 'ரட வெனுவென் ஏகத சிதிமு" என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை பத்திரிகை பேரவை மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட செயலமர்வு 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாத்தளை மாவட்ட ஊடக செயலமர்வு 23 மே 2019

இலங்கை பத்திரிகை பேரவையால் நடாத்தபடும் செயலமர்வின் தொடர்ச்சியாக 23 ஆம் திகதி மே மாதம் 2019 ஆம் ஆண்டு மாத்தளையிலுள்ள ஸ்பிரிங் விடுதியில் பயிற்சி பட்டறை ஒன்று இடம்பெற்றது. முரண்பாட்டு அறிக்கையிடல் மற்றும் பத்திரிகையாளர்களின் வகிபாகம் எனும் தலைப்பில் மாத்தளை மாவட்ட ஊடகவியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த செயலமர்வு இடம்பெற்றது.


கொழும்பு ஸ்ரீபாலி வளாகத்தின் முன்னாள் இயக்குநர் கலாநிதி திரு.ரூடர் வீரசிங்க, சிரேஷ்ட விரிவரையாளர் திரு.சமிந்த பெர்னான்டோ மற்றும் பொலிஸ் உத்தியோத்தர் திரு.எஸ்.பி. சந்தநாயக்க ஆகியோரால் வழிநடாத்தப்பட்டது. குறித்த செயலமர்வு கலந்துரையாடல் மற்றும் உரையாடல்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த செயலமர்வில் மாத்தளை மாவட்ட செயலாளர், பேரவை தலைவர், ஆணையாளர், பதில் ஆணையாளர், கணக்கதிகாரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள் கருத்து தெரிக்ககையில், தமது தொழில்முறை சார்ந்து மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் இதுபோன்ற செயலமர்வுகளை வரவேற்பதாகவும் தெரிவித்தனர்.
 

அநுராதபுர மாவட்டத்தில் மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு யூன் 22 2019 ஆம் ஆண்டு

இலங்கை பத்திரிகை பேரவையால் அநுராதபுர கிறிஸ்ரன் விடுதியில் 2019 ஆம் ஆண்டு யூன் மாதம் 22 தொடர் செயலமர்வுகளின் மற்றுமொரு பயிற்சி பட்டறை முன்னெடுக்கப்பட்டது.  இந்த பட்டறையில் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.  

இந்த நிகழ்வின் பிரதான தொனிப்பொருளாக முரண்பாட்டு அறிக்கையிடலும் மற்றும் ஊடகவியலாளர்களின் வகிபாகமும் அமைந்திருந்தது.  கொழும்பு ஸ்ரீபாலி வளாகத்தின் முன்னாள் இயக்குநர் கலாநிதி திரு.ரூடர் வீரசிங்க, பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச களனிப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொதுசன ஊடகத்துறைத்தலைவரும் சிரேஸ்ர ஊடகவியலாளருமான திரு. காமினி சுமனசேகர ஆகியோர் இந்த நிகழ்வை நெறிப்படுத்தியிருந்தனர்.


இந்த செயலமர்வில் அநுராதபுர மாவட்ட செயலாளர், பேரவை தலைவர், ஆணையாளர், பதில் ஆணையாளர், கணக்கதிகாரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

கம்பஹா மாவட்டத்தில் மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

இலங்கை பத்திரிகை பேரவையால் தொடர் செயலமர்வுகளின் மற்றுமொரு பயிற்சி பட்டறை  கம்பஹா சமர பங்குற் விடுதியில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்டது. 

 
இந்த பட்டறையில் கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்த நிகழ்வின் பிரதான தொனிப்பொருளாக முரண்பாட்டு அறிக்கையிடலும் மற்றும் ஊடகவியலாளர்களின் வகிபாகமும் அமைந்திருந்தது.  கொழும்பு ஸ்ரீபாலி வளாகத்தின் முன்னாள் இயக்குநர் கலாநிதி திரு.ரூடர் வீரசிங்க, சிரேஷ்ட விரிவரையாளர் விஜயானந்த ரூபசிங்க களனிப் பல்கலைகழகத்தின் திரு.காமினி சுமனசேகர ஆகியோர் பங்குபற்றியிருந்ததுடன் கலந்துரையாடல் மற்றும் உரையாடல்கள் மூலம் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்த செயலமர்வில் கம்பஹா மாவட்ட செயலாளர், பேரவை தலைவர், ஆணையாளர், பதில் ஆணையாளர், கணக்கதிகாரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
Image