egsisi

No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07 | Tel : 0112693272 | Fax: 0112693271

egsita

மாத்தளை மாவட்ட ஊடக செயலமர்வு 23 மே 2019

இலங்கை பத்திரிகை பேரவையால் நடாத்தபடும் செயலமர்வின் தொடர்ச்சியாக 23 ஆம் திகதி மே மாதம் 2019 ஆம் ஆண்டு மாத்தளையிலுள்ள ஸ்பிரிங் விடுதியில் பயிற்சி பட்டறை ஒன்று இடம்பெற்றது. முரண்பாட்டு அறிக்கையிடல் மற்றும் பத்திரிகையாளர்களின் வகிபாகம் எனும் தலைப்பில் மாத்தளை மாவட்ட ஊடகவியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த செயலமர்வு இடம்பெற்றது.


கொழும்பு ஸ்ரீபாலி வளாகத்தின் முன்னாள் இயக்குநர் கலாநிதி திரு.ரூடர் வீரசிங்க, சிரேஷ்ட விரிவரையாளர் திரு.சமிந்த பெர்னான்டோ மற்றும் பொலிஸ் உத்தியோத்தர் திரு.எஸ்.பி. சந்தநாயக்க ஆகியோரால் வழிநடாத்தப்பட்டது. குறித்த செயலமர்வு கலந்துரையாடல் மற்றும் உரையாடல்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த செயலமர்வில் மாத்தளை மாவட்ட செயலாளர், பேரவை தலைவர், ஆணையாளர், பதில் ஆணையாளர், கணக்கதிகாரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த பயிற்சி பட்டறையில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள் கருத்து தெரிக்ககையில், தமது தொழில்முறை சார்ந்து மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் இதுபோன்ற செயலமர்வுகளை வரவேற்பதாகவும் தெரிவித்தனர்.
 
Image