egsisi

No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07 | Tel : 0112693272 | Fax: 0112693271

egsita

செய்திக்குறிப்பு

2026 பெப்ரவரி மாதத்தில் தேசிய பத்திரிகைகளில் இலங்கை பத்திரிகை பேரவையின் நெறிமுறைகள் மீறப்பட்ட விதம் குறித்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு

sinhala report final

2026 - පෙබරවාරි මාසය  තුළ  ජාතික පුවත්පත්වල ආචාරධර්ම උල්ලංඝනය වීම නිරීක්ෂණය වූ ආකාරය      

සම්පූර්ණ වාර්තාව - සිංහල භාෂාව

2026 பெப்ரவரி மாதத்தில் தேசிய பத்திரிகைகளில் இலங்கை பத்திரிகை பேரவையின் நெறிமுறைகள் மீறப்பட்ட விதம் குறித்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு

முழு அறிக்கை - தமிழ் மொழி

Observation of Ethical Violations in National Newspapers February 2026   

Full Report - English Language

இலங்கை பத்திரிகை பேரவைக்கு மாற்றாக முன்மொழியப்பட்ட ஊடக ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட கருத்துத் திட்டப் பத்திரம், வெகுசன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் கௌசல்யா ஆரியரத்ன அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது

இலங்கை பத்திரிகை பேரவைக்கு மாற்றாக, ஊடகத்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் முன்மொழியப்பட்ட ஊடக ஆணைக்குழு அமைப்பை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட கருத்துத் திட்டப் பத்திரம் அண்மையில் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் கௌஷல்யா ஆரியரத்னாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த கருத்துத் திட்டப் பத்திரம், மூத்த ஊடக வல்லுநர்கள், நிர்வாகிகள், தொடர்பியல் மற்றும் ஊடகக் கல்வியியல் அறிஞர்கள், சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட பத்து வள நபர்களைக் கொண்ட குழுவினால் தயாரிக்கப்பட்டது. இது அமைச்சக அரங்கில், இலங்கை பத்திரிகை பேரவை தலைவர் பிரியன் ஆர். விஜேபண்டார அவர்களால் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
வரைவுக் குழு உறுப்பினர்கள், அமைச்சக அதிகாரிகள் மற்றும் பல ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
 
அந்நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் டாக்டர். கௌசல்யா ஆரியரதன கூறியதாவது:
“நீண்ட காலமாக, ஊடகத்துறையில் ஏதோ ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு தேவை என பொதுமக்களும் சிவில் சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றனர். அரசியல் தலையீடு இல்லாத ஒரு ஆணைக்குழு அவசியம் என்பதையும் பல தரப்பினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக்காட்டியுள்ளனர். எமது கொள்கை அறிக்கையிலும் ‘சுயாதீன ஊடக ஆணைக்குழு’ ஒன்றை நிறுவும் உறுதிமொழி இடம்பெற்றுள்ளது.
 
முன்னர், ஊடக அமைப்புகளே கருத்துச் சுதந்திரம் மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை பாதுகாத்துக் கொண்டே, சில ஒழுங்குமுறை முறைகள் எவ்வாறு அமையலாம் என்பதைக் குறித்து கலந்துரையாடி அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. நானும் முன்பு ஊடக அமைப்புகளுடன் இணைந்து இவ்விவகாரத்தில் தலையீடுகள் செய்துள்ளேன்.
 
இப்போது முன்னேறுவதற்கான ஒரு வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. ஆகையால், ஊடகத் தொழில்முனைவோர், ஊடக அமைப்புகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஊடகத்துறையின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக இந்த முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.”
 
இந்த கருத்துத் திட்டப் பத்திரத்தை தயாரித்த குழுவின் உறுப்பினர்கள்:
பிரியன் ஆர். விஜேபண்டார – தலைவர், இலங்கை பத்திரிகை பேரவை 
ஜகத் லியனகே ஆராச்சி – வழக்கறிஞர்; உறுப்பினர், தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு 
டாக்டர் மனோஜ் ஜினதாச – தலைவர்/மூத்த விரிவுரையாளர், Department of Mass Communication, களனிப் பல்கலைக்கழகம்
அசோக டயஸ் – மூத்த ஊடகவியலாளர்/வருகை விரிவுரையாளர்
மண்டனா இஸ்மையில் – இதழாசிரிய ஆலோசகர், The Sunday Morning உறுப்பினர், தேசிய ஊடகக் கொள்கை வரைவுக் குழு
நிரோஷன தம்பவிட்ட – பத்திரிகை ஆணையாளர், இலங்கை பத்திரிகை பேரவை
நிவந்தி திலகரத்னே – சட்ட அதிகாரி, Associated Newspapers of Ceylon Limited
ஹில்மி மொஹம்மட் – முன்னாள் துணை இயக்குநர், அரசாங்க தகவல் திணைக்களம்
கணபதிப்பிள்ளை குமணன் – சிரேஷ்ட புகைப்பட ஊடகவியலாளர் (செயற்பாடுகளில் பங்கேற்பதில் சிரமம் இருப்பதாகக் கூறி பின்னர் விலகினார்)
லசந்த டி சில்வா – மூத்த ஊடகவியலாளர்/ஒழுங்குபடுத்துநர், சுதந்திர ஊடக இயக்கம்
பிரியந்த வேதமுல்ல – தலைவர், சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு
 
(மேலும், ஜகத் லியனகே ஆராச்சி, மண்டனா இஸ்மையில் மற்றும் நிவந்தி திலகரத்னே ஆகியோர், இந்த கருத்துத் திட்டப் பத்திரம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்ட நேரத்தில் மேற்குறிப்பிட்ட பதவிகளில் இல்லை என்பதையும் குறிப்பிடத்தக்கது.)

 2

 2

 2

2025 ஆம்‌ ஆண்டு அக்டோபர்‌ - ஜனவரி 2026 காலப்பகுதிகளில்‌ மும்மொழி தேசிய பத்திரிகைகளிலும்‌ இலங்கை பத்திரிகை பேரவையின்‌ ஒழுக்கக்கோட்பாடுகள்‌ மீறப்பட்ட விதம்‌ குறித்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு

rep new edit

2025 වර්ෂයේ ඔක්තෝබර් - 2026 ජනවාරි කාලය තුළ ජාතික පුවත්පත්වල ආචාරධර්ම උල්ලංඝනය වීම් නිරීක්ෂණය වූ ආකාරය

සම්පූර්ණ වාර්තාව - සිංහල භාෂාව

2025 ஆம்‌ ஆண்டு அக்டோபர்‌ - ஜனவரி 2026 காலப்பகுதிகளில்‌ மும்மொழி தேசிய பத்திரிகைகளிலும்‌ இலங்கை பத்திரிகை பேரவையின்‌ ஒழுக்கக்கோட்பாடுகள்‌ மீறப்பட்ட விதம்‌ குறித்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு

முழு அறிக்கை - தமிழ் மொழி

Ethical violations observed in national newspapers during the period from October 2025 to January 2026

Full Report - English Language

 

இலங்கை பத்திரிகை பேரவைக்கு பதிலாக ஊடகத்துறையின் வளர்ச்சிக்காக நிறுவப்படவுள்ள அமைப்பு சார்ந்து முன்மொழியப்பட்ட அடிப்படை கருத்துத் திட்டப் பத்திரம்

இலங்கை பத்திரிகை பேரவைக்கு பதிலாக ஊடகத்துறையின் வளர்ச்சிக்காக நிறுவப்படவுள்ள அமைப்பு சார்ந்து முன்மொழியப்பட்ட அடிப்படை கருத்துத் திட்டப் பத்திரம்

இங்கே பதிவிறக்கம் செய்யவும்

உங்கள் பின்னூட்டங்களை சமர்ப்பிக்கவும்

இலங்கை பத்திரிகை பேரவையின் ஒழுக்கக்கோவையின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழா

இலங்கை பத்திரிகை பேரவையின் ஒழுக்கக்கோவையின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழா 14.10.2021 அன்று அரசாங்க தகவல் திணைக்கள கேடபோர் கூட்டத்தில் Zoom தொழில்நுட்பம் ஊடாக ஊடகத்துறை கௌரவ அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பி.விஜேவீர, அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்ச, கௌரவ பேராசிரியர் சுனந்த மகேந்திர, தாபல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மற்றும் பேரவை பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். விருந்தினர் உரையை மூத்த ஊடகவியலாளர் ஆரியநந்த தொம்பகஹவத்த மற்றும் சட்டத்தரணி கே.டபிள்யூ. ஜனரஞ்ச ஆகியோர் நிகழ்த்தினர்.இலங்கை பத்திரிகை பேரவையின் இணையத்தளம் புதிய அம்சங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆண்டு நிறைவை ஞாபகப்படுத்தும் வகையில் கடித உறை மற்றும் முத்திரை ஆகியன வெளியிடப்பட்டன. இந்த நிகழ்வின்போது பேரவையின் தலைவரும், சிரேஸ்ட விரிவரையாளருமான மஹிந்த பத்ரண மற்றும் பேரவை ஆணையாளர் ஆகியோரால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

Image

முகவரி

இலங்கை பத்திரிகை பேரவை,
325, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 07
Tel : 0112693272 | Fax: 0112693271
Email- slpresscouncil@gmail.com